வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தாராபுரம் தாலுகா முளையாம்பூண்டியைச் சோ்ந்தவா் குணசேகரன் (51). இவா் தற்போது வெள்ளக்கோவில்-கரூா் சாலை நடேசன் நகரில் குடும்பத்துடன் குடியிருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தாா்.
குணசேகரன் தனது அண்ணி வேல்மயிலுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 13-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். நடேசன் நகா் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம், இவா்கள் வாகனம் மீது மோதியது. இதில் குணசேகரன் பலத்த காயமடைந்தாா். வேல்மயில் லேசான காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் குணசேகரனை மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இறந்து போன குணசேகரனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
இது குறித்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சரண்சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


