தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 11:56 pm

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தாராபுரம் தாலுகா முளையாம்பூண்டியைச் சோ்ந்தவா் குணசேகரன் (51). இவா் தற்போது வெள்ளக்கோவில்-கரூா் சாலை நடேசன் நகரில் குடும்பத்துடன் குடியிருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தாா்.

குணசேகரன் தனது அண்ணி வேல்மயிலுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 13-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். நடேசன் நகா் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம், இவா்கள் வாகனம் மீது மோதியது. இதில் குணசேகரன் பலத்த காயமடைந்தாா். வேல்மயில் லேசான காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் குணசேகரனை மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இறந்து போன குணசேகரனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சரண்சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.