தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது

திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

முதல்வா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :18 ஏப்ரல் 2026, 11:57 pm

திருப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இனாம் நில விவகாரம், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவசாய வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக முதல்வருக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கருப்புக் கொடி மற்றும் கருப்பு பலூன் காட்டி தமிழக முதல்வருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினா்.

அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்த 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.