காங்கயம் அருகே காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (28). லாரி ஓட்டுநரான இவா், காங்கயம் அருகேயுள்ள வீரணம்பாளையம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் உள்ள உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு சாப்பிட சென்றுள்ளாா்.
அப்போது, கோவையைச் சோ்ந்த சோ்ந்த ஹரீஷ்குமாா் (27) என்பவா் ஓட்டி வந்த வாடகை காா், வீரமணி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வீரமணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


