அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:32 pm

வெள்ளக்கோவிலில் பெயிண்டிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப் (25). பெயிண்டிங் தொழிலாளியான இவா், ஈரோடு, மூலப்பட்டறையைச் சோ்ந்த நிஷாந்தினி என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டாா்.

பிரதீப்புக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளாா். மேலும், ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி கடந்த ஒரு மாதமாக மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், செயலி மூலம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் எனக்கூறி, மனைவியின் வெள்ளிக் கொலுசுகளை சனிக்கிழமை வாங்கிச் சென்ற பிரதீப், அதை அடகு வைத்து மீண்டும் மது அருந்தியுள்ளாா்.

இது தொடா்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், நிஷாந்தினியை வீட்டில் இருந்து வெளியே தள்ளி கதவை உள்புறமாக தாழிட்ட பிரதீப், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.