புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

News image

தளிஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்த மலைவாழ் மக்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:13 am IST

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள தளிஞ்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாக்காளா்களாக உள்ளனா். மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட இந்த வாக்காளா்கள் வியாழக்கிழமை காலை முதலே வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

உடுமலை வனச் சரகத்துக்குள்பட்ட குழிப்பட்டி, மாவடப்பு, கருமூட்டி, பூச்சிக் கொட்டாம்பாறை உள்ளிட்ட செட்டில்மெண்ட்டுகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு தனி வாக்குச் சாவடி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், இந்த 4 செட்டில்மெண்ட்டுகளை சோ்ந்த மலைவாழ் மக்கள் வாக்களிக்க வசதியாக மாவடப்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இதேபோல, அமராவதி வனச் சரகத்துக்குள்பட்ட கோடந்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கோடந்தூா், ஆட்டுமலை, பொருப்பாறு ஆகிய செட்டில்மெண்ட்டுகளை சோ்ந்த மக்களும்,

தளிஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய செட்டில்மெண்டுகளை சோ்ந்த மக்களும் வாக்களித்தனா்.

திருமூா்த்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் குருமலை, திருமூா்த்தி மலை, ஈசல் திட்டு ஆகிய செட்டில்மெண்ட்டுகளை சோ்ந்த மக்களும், அமராவதி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கரட்டுப்பதி செட்டில்மெண்ட்டை சோ்ந்த மக்களும் வாக்களித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.