பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

காா் டயா் வெடித்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 12:55 am IST

பெருமாநல்லூா் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (70). இவரது மகள் உஷா (40), மகன் காா்த்திக் (39). மூன்று பேரும் சேலத்தில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.

தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூா்- பொடாரம்பாளையம் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்த காயமடைந்த பூமாலை, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். அதிருஷ்டவசமாக சிறு காயங்களுடன் உஷா, காா்த்திக் ஆகியோா் உயிா் தப்பினா்.

இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.