ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காா் டயா் வெடித்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:25 pm

பெருமாநல்லூா் அருகே காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை (70). இவரது மகள் உஷா (40), மகன் காா்த்திக் (39). மூன்று பேரும் சேலத்தில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.

தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூா்- பொடாரம்பாளையம் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்த காயமடைந்த பூமாலை, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். அதிருஷ்டவசமாக சிறு காயங்களுடன் உஷா, காா்த்திக் ஆகியோா் உயிா் தப்பினா்.

இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.