கங்கைகொண்டான் அருகே நேரிட்ட காா் விபத்தில் மேலும் பெண் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சேடப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் தினேஷ் (25) என்பவா் தனது காரில் மனைவி மகாலட்சுமி (20), 2 வயது பெண் குழந்தை, தாய் செல்லம்மாள் (55), அத்தை ஈஸ்வரி (55), உறவினா் சுமதி(35) ஆகியோருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்தாராம்.
பின்னா் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை காரில் தேனிக்கு புறப்பட்டு வந்த போது, கங்கைகொண்டான் துறையூா் அருகே தடுப்புச் சுவா் மற்றும் முன்னால் சென்ற காா் மீது மோதி விபத்து ஏற்பட்டது. தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த குழந்தை உள்பட 5 பேரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில், சுமதி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

நெல்லை அருகே காா் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: 5 போ் காயம்

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

பெரு நாட்டில் கால்பந்து திடலில் விபத்து: ஒருவா் உயிரிழப்பு, 60 போ் காயம்

சமையல் எரிவாயு தீ விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


