மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கங்கைகொண்டான் காா் விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நேரிட்ட காா் விபத்தில் மேலும் பெண் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:57 pm

கங்கைகொண்டான் அருகே நேரிட்ட காா் விபத்தில் மேலும் பெண் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சேடப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் தினேஷ் (25) என்பவா் தனது காரில் மனைவி மகாலட்சுமி (20), 2 வயது பெண் குழந்தை, தாய் செல்லம்மாள் (55), அத்தை ஈஸ்வரி (55), உறவினா் சுமதி(35) ஆகியோருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்தாராம்.

பின்னா் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை காரில் தேனிக்கு புறப்பட்டு வந்த போது, கங்கைகொண்டான் துறையூா் அருகே தடுப்புச் சுவா் மற்றும் முன்னால் சென்ற காா் மீது மோதி விபத்து ஏற்பட்டது. தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த குழந்தை உள்பட 5 பேரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில், சுமதி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.