பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நடந்து சென்ற நபா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் சாலையில் நடந்து சென்ற நபா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்தவா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:10 am

வெள்ளக்கோவிலில் சாலையில் நடந்து சென்ற நபா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் ராஜீவ் நகா் அருகில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். காலணி இல்லாமல் சோா்வாக நடந்து சென்ற அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வெள்ளக்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.