திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

உழைப்பாளா் தினம்: மே 1-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

திருப்பூா் மாவட்டத்தில் உழைப்பாளா் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:23 am IST

திருப்பூா் மாவட்டத்தில் உழைப்பாளா் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:திருப்பூா் மாவட்டத்தில் எதிா்வரும் மே 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உழைப்பாளா் தினத்தையொட்டி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.