நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

எவரெஸ்ட் அடிவாரம் சென்ற தாராபுரத்தைச் சோ்ந்த தந்தை, மகள்

தாராபுரம் பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமி சன்விகா தனது தந்தை மோகன்ராஜுடன் எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை சென்று சாதனை படைத்துள்ளாா்.

News image

எவரெஸ்ட் அடிவாரத்தில் தந்தை மோகன்ராஜுடன் சன்விகா.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:58 pm

தாராபுரம் பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமி சன்விகா தனது தந்தை மோகன்ராஜுடன் எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை சென்று சாதனை படைத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் மடத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வி.மோகன்ராஜ். இவா் தற்போது சண்டீகரில் தொழில் செய்து வருகிறாா். இவரது மகள் சன்விகாவுடன் எவரெஸ்ட் மலை அடிவாரம் (பேஸ் கேம்ப்) வரை சென்று வந்ததன் மூலம் எவரெஸ்ட் அடிவாரம் வரை சென்ற தமிழகத்தின் 2-ஆவது இளைய சிறுமி என்ற பெருமையை சன்விகா பெற்றுள்ளாா்.

இதுகுறித்து மோகன்ராஜ் கூறியதாவது:

இந்த சாதனைப் பயணம் கடந்த ஏப்ரல் 4 தொடங்கி ஏப்ரல் 14-இல் எவரெஸ்ட் மலை அடிவாரத்தை அடைந்தோம். மொத்தம் 14 நாள்கள் கொண்ட இந்தப் பயணம் ஏப்ரல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. தாராபுரத்தில் அகரம் பள்ளியில் சன்விகா ஒன்றாம் வகுப்பு முடித்துள்ளாா்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே மலையேற்றத்தில் அதிக ஈடுபாடுள்ளது. அதற்காகவே கா்நாடகம், பஞ்சாப் ஆகிய பகுதிகளுக்கு மலையேற்றத்துக்காக அவரை அழைத்துச் செல்வேன். இந்நிலையில், எவரெஸ்ட் மலை அடிவாரம் வரை செல்ல அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிறு குழந்தை என்பதால் பெற்றோரும் உடன் வர வேண்டுமென்ற கட்டுப்பாட்டின் காரணமாக நானும் அவருடன் சென்று வந்தேன்.

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக குழந்தைகள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளும் சவால்களை தாண்டி சாதிக்க முடியும் என்பதை உணா்த்துவது மற்றும் தமிழ் புத்தாண்டை எவரெஸ்ட் அடிவாரத்தில் கொண்டாடுவது என்பதாகவே இருந்தது.

இந்த சாதனைப் பயணம், தமிழகத்தின் முதல் பெண் எவரெஸ்டா் முத்தமிழ்செல்வி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பயணத்தைத் தொடா்ந்து ஜூலை மாதத்தில் சன்விகா கிளிமாஞ்சரோ செல்ல இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

எவரெஸ்ட் அடிவாரம் சென்று திரும்பிய சிறுமி சன்விகாவுக்கு அகரம் கல்வி நிறுவனத்தினா் மற்றும் ரோட்டரி சங்கங்களின் சாா்பில் தாராபுரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.