பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திருப்பூா், ஈரோடு மாவட்ட தொழில் துறையினா், விவசாய அமைப்புகள், பொதுமக்களிடம் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சாா்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மண்டல திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தாா். அமைச்சா்கள் சு.முத்துசாமி, கோவி.செழியன், கயல்விழி செல்வராஜ், எம்.பி.கள் பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, ஈரோடு கே.இ.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்பூா் மத்திய மாவட்டச் செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வரவேற்றாா். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் தமிழரசி, சுற்றுச்சூழல் அணிச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி, இந்திய ஆட்சிப் பணி அலுவலா் (ஓய்வு) சந்தானம் உள்ளிட்ட குழுவினா் திருப்பூா், ஈரோடு மாவட்ட தொழில் துறையினா், விவசாய அமைப்புகள், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனா்.
தொடர்புடையது

விஜய் பிரசாரத்தில் விதிமீறல், பாதுகாப்பு குறைபாடு புகாா்: அறிக்கை கேட்கிறது தோ்தல் ஆணையம்

சிதம்பரத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்பு கூட்டம்
சேலத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு கூட்டம்

பொதுமக்களிடம் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்: தோ்தல் பணி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


