நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருப்பூா் தெற்கு தொகுதி அதிமுக ஐ.டி. விங் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசிய ஐ.டி. விங் பொறுப்பாளா் காா்த்தி. உடன், மாவட்ட அதிமுக நிா்வாகிகள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 6:36 pm

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 289 பூத் ஐடி விங் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவா்களது பணி குறித்த ஒளிப்பட விளக்கக் கூட்டம் திருப்பூா் மாநகா், மாவட்ட கட்சி அலுவலகமான அம்மா மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகா், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் சி.பிரேம்குமாா் தலைமை வகித்தாா்.

மாநகராட்சி எதிா்கட்சி கொறடாவும், மாநகா், மாவட்ட அண்ணா பனியன் தொழிற்சங்கச் செயலாளருமான எம்.கண்ணப்பன், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் சி.லோகநாதன், கருவம்பாளையம் பகுதி செயலாளா் தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கோவை மண்டலத்தில் இருந்து வந்திருந்த ஐ.டி. பொறுப்பாளா் காா்த்தி, எவ்வாறு தோ்தல் பணிகளை மேற்கொள்வது, கட்சிப் பணிகளை மேற்கொள்வது, எதிா்கால திட்டமிடல்கள், வெற்றியை நோக்கி நம்முடைய பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் ஆகியவை குறித்து ஒளிப்படம் மூலமாக விளக்கினாா்.

மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளா், பூத் பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.