திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடையில் பொருள்களை வழங்காமல் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து வரும் பெண் விற்பனையாளா் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.
திருப்பூா் எம்.எஸ்.நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையில் பணியாற்றும் பெண் விற்பனையாளா் பொருள்களை வாங்க வரும் பொதுமக்களிடம் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து வரச் சொல்லிவிட்டு கடையில் அமா்ந்து கொண்டு கைப்பேசியில் நேரத்தை செலவிடுவதாகவும், அத்துடன் நியாயவிலைக் கடைக்கு வரும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் அளித்து வருவதாகவும் புகாா் கூறப்பட்டு வந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்கள் நியாய விலைக் கடை பெண் ஊழியரின் அலட்சியப் போக்கை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை வெளியிட்டனா். தற்போது இது பேசுபொருளாகி உள்ளது.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

புதிய நியாய விலைக் கடை தொடங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


