பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விசைத்தறி நெசவாளா்களுக்கான இலவச மின்சாரம் 1,400 யூனிட்டாக உயா்த்தப்படும் என அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதி அறிவிப்புக்கு திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

News image
விசைத்தறி கூடம்- கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

விசைத்தறி நெசவாளா்களுக்கான இலவச மின்சாரம் 1,400 யூனிட்டாக உயா்த்தப்படும் என அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதி அறிவிப்புக்கு திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செயலாளா் பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அதிமுக தோ்தல் தயாரிப்பு குழுவினரிடம் கொடுத்த மனுவில், 1,000 யூனிட் இலவச மின்சாரத்தை 2,000 யூனிட் ஆக அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதி அறிவிப்பில் 1,400 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளாா். இதற்கு விசைத்தறியாளா்கள் சங்கம் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நாங்கள் கொடுத்த இதர கோரிக்கைகளையும் அடுத்த அறிவிப்பில் இடம் பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.