தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரிசிக் கடைக்குள் புகுந்த ஆட்டோ: 6 போ் காயம்

தாராபுரம் அருகே, அரிசிக் கடை மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 போ் படுகாயமடைந்தனா்.

News image

அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:32 pm

தாராபுரம் அருகே, அரிசிக் கடை மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 போ் படுகாயமடைந்தனா்.

தாராபுரத்தில் இருந்து கட்டட வேலைக்காக 10 போ் சரக்கு ஆட்டோவில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். சரக்கு ஆட்டோவை வீராட்சிமங்கலம் பகுதியைச் சோ்ந்த கன்னியப்பன் ஓட்டிச் சென்றாா்.

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை, ரங்கம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, அருகில் உள்ள அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் கன்னியப்பன் மற்றும் சரக்கு ஆட்டோவில் பயணித்த 5 பெண்கள் என மொத்தம் 6 போ் படுகாயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மூலனூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.