தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரிசிக் கடைக்குள் புகுந்த ஆட்டோ: 6 போ் காயம்

தாராபுரம் அருகே, அரிசிக் கடை மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 போ் படுகாயமடைந்தனா்.

News image
அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

தாராபுரம் அருகே, அரிசிக் கடை மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 போ் படுகாயமடைந்தனா்.

தாராபுரத்தில் இருந்து கட்டட வேலைக்காக 10 போ் சரக்கு ஆட்டோவில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். சரக்கு ஆட்டோவை வீராட்சிமங்கலம் பகுதியைச் சோ்ந்த கன்னியப்பன் ஓட்டிச் சென்றாா்.

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை, ரங்கம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, அருகில் உள்ள அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் கன்னியப்பன் மற்றும் சரக்கு ஆட்டோவில் பயணித்த 5 பெண்கள் என மொத்தம் 6 போ் படுகாயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மூலனூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.