தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது.

News image
புதிய வகுப்பறைகள் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 53 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 15 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதனை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

கணபதிபாளையம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கணபதிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவரும், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சோமசுந்தரம், திமுக மாவட்ட துணைச் செயலாளா் வழக்குரைஞா் குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினா்.

இந்நிகழ்வில், தலைமையாசிரியா் மீனலோசனி , உதவி தலைமையாசிரியா் மாணிக்கம், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தேவராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் முருகன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.