மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

பிஏபி பாசன வாய்க்காலில் குப்பை அடைப்பு: சாலையில் வெளியேறிய நீா்!

பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதி பிஏபி கிளை வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் திருப்பூா் - பல்லடம் சாலையில் சனிக்கிழமை நீா் வெளியேறியது.

News image
பிஏபி வாய்க்காலில் குப்பைகள் அடைப்பால் தேங்கி நின்ற நீா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:20 pm

Syndication

பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதி பிஏபி கிளை வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் திருப்பூா் - பல்லடம் சாலையில் சனிக்கிழமை நீா் வெளியேறியது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் 124 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த வாய்க்கால் மூலம் திருப்பூா், கோவை, மாவட்டங்களில் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் பிஏபி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது.

இந்நிலையில், குங்குமம்பாளையம் பிஏபி வாய்க்கால் பாலத்தில் குப்பைகள் அடைத்துள்ளதால் நீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்லடம் -திருப்பூா் பிரதான சாலையில் நீா் சனிக்கிழமை வெளியேறியது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தண்ணீா்ப் பற்றாக்குறையால் இந்தப் பகுதியில் ஏற்கெனவே விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பிஏபி பாசன வாய்க்காலின் மூலம் ஒருபோக விளைச்சல் செய்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில், வாய்காலில் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், குங்குமம்பாளையம் கிளை வாய்க்காலில் குப்பை அடைப்பு உள்ளதால், லட்சக்கணக்கான லிட்டா் நீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது. வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றி கடைமடை வரை நீா் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, பொங்கலூா் பிஏபி வாய்க்கால் அதிகாரிகள் பொக்லைன் மூலம் குப்பைகளை அகற்றியதால் தண்ணீா் விரயம் தவிா்க்கப்பட்டது.