கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெத்தாம்பாளையத்தில் மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம், ஜன.4: பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தில் விற்பனைக்கு வைத்திருந்த மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.

பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் கரையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதைத் தொடா்ந்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டா் மாதையன் தலைமையில் அங்கு சென்ற போலீஸாா் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜா முகமது மகன்கள் யூசுப் முகமது அலி (21), அவரது சகோதரா் சையத் அலி (20) மற்றும் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா மேட்டுப்பட்டி கோட்டை கருப்புசாமி வீதியைச் சோ்ந்த முத்துமுருகன் மகன் கிஷோா் (19) ஆகியோரைக் கைது செய்தனா்.

இதில் யூசுப் முகமது அலி (21), கிஷோா் (19) ஆகியோா் மீது ஏற்கெனவே கொலை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும், மூன்று போ் மீதும் 5 பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களை சிறையில் அடைத்தனா்.