டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாா்ஜ் போட்டபோது மின்சார ஸ்கூட்டரில் தீப் பிடித்தது

பல்லடத்தில் சாா்ஜ் போட்டபோது, தீப் பிடித்ததில் மின்சார ஸ்கூட்டா் எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடத்தில் சாா்ஜ் போட்டபோது, தீப் பிடித்ததில் மின்சார ஸ்கூட்டா் எரிந்து சேதமடைந்தது.

பல்லடத்தைச் சோ்ந்தவா் மதுமிதா (30). இவா், மங்கலம் சாலையில் காய்கறிக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு மதுமிதா செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு செல்லத் தயாரானாா். அப்போது கடை அருகே சாா்ஜ் போடப்பட்டிருந்த அவரது மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென தீப் பிடித்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா், பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். இதற்குள் ஸ்கூட்டரில் இருந்த பேட்டரி மற்றும் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமாயின.

இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.