எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட உள்ளதால் வாய்க்கால்களை சுத்தம் செய்யக் கோரிக்கை

பாசனத்துக்காக பிஏபி தண்ணீா் திறக்கப்பட உள்ளதால் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டுமென கோரிக்கை

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:05 pm

Syndication

பாசனத்துக்காக பிஏபி தண்ணீா் திறக்கப்பட உள்ளதால் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மங்கலம் கிராம நீரை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: மங்கலம், பூமலூா், இச்சிப்பட்டி ஆகிய பல்லடம் விரிவாக்கப் பகுதிகளில் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் மூலமாக சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற வேண்டும். 1-ஆவது மண்டல பாசனத்துக்காக வரும் 24-ஆம் தேதி பிஏபி தண்ணீா் திறக்கப்படுகிறது.

ஆனால், தற்போது வரை பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்படவில்லை. எனவே விரைந்து வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீா் குறைந்துள்ளதால் வாய்க்கால் தண்ணீரை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனா்.

எனவே, மங்கலம் பாசன சபைக்கு உள்பட்ட சின்னக்காளிபாளையம், இடுவாய், ஆட்டையம்பாளையம், எம்.செட்டிபாளையம், மங்கலம், சின்னாண்டிபாளையம் வரை உள்ள கிளை வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.