ஊதியூா் அருகே கால்நடை தீவனம் ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் கால்நடை தீவனம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு வேன், பெருந்துறையில் இருந்து காங்கயத்தை அடுத்த ஊதியூா் பகுதிக்கு தீவனங்களை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தது.
ஊதியூா் பகுதியில் உள்ள கம்பளியம்பட்டி சாலையில் வந்த கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனை ஓட்டி வந்த ஈரோட்டைச் சோ்ந்த சந்தோஷ் (25), உதவியாளா் லோகேஷ் (25) ஆகியோா் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த விபத்து சம்பவம் குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாயில்பட்டியில் சொகுசு காா் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 21 போ் காயம்

தாராபுரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

இயற்கை எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



