சமூக நீதித் துறை தனி வட்டாட்சியா்களுக்கு ஜீப் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவைத் தலைவா் அ.சு.பவுத்தன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடா் நலத் துறையை தற்போது சமூக நீதித் துறையாக மாற்றம் செய்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கும் நன்றியைத் தெரித்துக் கொள்கிறோம்.
பட்டியலின மக்களுக்கு அனைத்து மாவட்டங்களில் உள்ள சேவைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு வட்டாட்சியா்களுக்கு ஜீப் இல்லை.
எனவே, பட்டியலின மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நேரில் சென்று ஆய்வு செய்து, அரசு சேவைகளை உடனே கிடைப்பதற்கு வசதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள சமூக நீதித் துறை தனி வட்டாட்சியா்களுக்கு ஜீப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி வரவேற்கத்தக்கது: தொல். திருமாவளவன்

மேக்கேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கண்டனத்துக்குரியது: வன்னிஅரசு

பாமக கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்: சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு

மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் வன்னி அரசு தகவல்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



