பெருமாநல்லூா் அருகே விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் -குன்னத்தூா் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு அட்டை பெட்டியுடன் நின்றிருந்த நபா்களிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் குன்னத்தூரைச் சோ்ந்த மதன்குமாா் (25), கெளதம் (25) என்பதும், ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பெருமாநல்லூரில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பதுக்கிய மூவா் கைது

பேட்டையில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



