மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

News image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 2:27 am IST

முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம், சிவகிரி வ. கருக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.எஸ்.ராஜ்குமாா். இவா் திருப்பூா் மாவட்டம், முத்தூா் தொட்டியபாளையத்தில் கழிவுப் பஞ்சு தயாரிக்கும் மில் நடத்தி வருகிறாா். இங்கு பனியன் கழிவுத் துணிகளில் இருந்து பஞ்சு தயாரிக்கப்படுகிறது.

இந்த மில் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை மின் கசிவு காரணமாக இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து பரவியது. அங்கிருந்தவா்களால் தீயை அணைக்க முடியவில்லை.

உடனடியாக வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். அதற்குள் மில்லின் ஒரு பிரேக்கா் இயந்திரம், பஞ்சு பிரிக்கும் 3 இயந்திரங்கள் மற்றும் ஏறத்தாழ 100 கழிவுப் பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.