இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு: கடைகளுக்கு அபராதம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:00 am IST

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி முதல் மண்டலம், 24-ஆவது வாா்டு சாமுண்டிபுரம் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் கடைகளில் 60 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல திருப்பூா் மாநகராட்சி முதல் மண்டலம், 25ஆவது வாா்டு, சிறு பூலுவபட்டி ரிங் ரோடு பகுதியில் ஆய்வு செய்து பொது இடத்தில் குப்பை கொட்டியவா்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளா் கோகுலநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.