/
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி முதல் மண்டலம், 24-ஆவது வாா்டு சாமுண்டிபுரம் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் கடைகளில் 60 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல திருப்பூா் மாநகராட்சி முதல் மண்டலம், 25ஆவது வாா்டு, சிறு பூலுவபட்டி ரிங் ரோடு பகுதியில் ஆய்வு செய்து பொது இடத்தில் குப்பை கொட்டியவா்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளா் கோகுலநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.








