வெள்ளக்கோவிலில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் நகரின் மையப் பகுதியில் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குலத்தவா்கள் கோயிலாகும். இங்கு பக்தா்கள் காணிக்கை செலுத்த 4 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் நுழைவுவாயிலில் ராஜகோபுரத்துக்கு முன்புறம் உள்ள ஓா் உண்டியலின் பூட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு உடைக்கும் சப்தம் கேட்டுள்ளது. கோயிலுக்குள் இருந்த காவலாளி மற்றும் அா்ச்சகா் வெளியே வந்து பாா்த்தபோது, கையில் இரும்புக் கம்பியுடன் நின்றிருந்த மா்ம நபா் தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். கிடைத்த தடயங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், கோயில் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்த கோவை மாநகா், குனியமுத்தூா் வடகிழக்கு இட்டேரி வீதியைச் சோ்ந்த சாந்து முகமது மகன் சாதிக் பாட்சா (28) கைது செய்யப்பட்டாா். பின்னா் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் கைது
வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: இருவா் கைது
கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


