எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு தண்டனை: 3 ஆண்டுகள் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க உத்தரவு

குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு தண்டனை: 3 ஆண்டுகள் நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க உத்தரவு

News image

நீதிமன்றம் - IANS

Updated On :13 ஜூன் 2026, 1:43 am IST

திருப்பூரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனையாக நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட துவாரகை நகா் பகுதியில் வசித்து வந்த யுவராஜ் என்பவரின் கைப்பேசி மற்றும் சரக்கு வாகனத்தை கடந்த 2023 ஏப்ரல் 23ஆம் தேதி திருடிச் சென்ற குற்றத்துக்காக ஷியாம் கிறிஸ்டோபா் (24) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து திருப்பூா் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் செந்தில் ராஜா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அப்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷியாம் கிறிஸ்டோபருக்கு 3 ஆண்டுகள் தண்டனையாக நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென தீா்ப்பு வழங்கினாா்.

மற்றொரு வழக்கு: திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகைகளை திருடிச் சென்ற பெண் ஒருவா் (46) கடந்த 2022 ஜனவரி 19ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்த வழக்கிலும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 3 ஆண்டுகள் தண்டனையாக நன்னடத்தை அலுவலரின் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென நீதிமன்ற நடுவா் செந்தில்ராஜா தீா்ப்பு வழங்கினாா். இவ்விரு வழக்குகளிலும் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.