வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அமராவதி அணையில் இருந்து குடிநீருக்கு தண்ணீா் திறக்க வேண்டும்

தாராபுரம் பகுதி மக்களின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

தாராபுரம் நகரின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் மனு அளித்த தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன்.

Updated On :14 ஜூன் 2026, 2:11 am IST

தாராபுரம் பகுதி மக்களின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாராபுரம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இந்த 30 வாா்டுகளிலும் தற்போது குடிநீா் பற்றாக்குறை நிலவி வருகிறது. கோடைக் காலம் என்பதால் நகராட்சிப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் நீா்வரத்து இல்லாததால் குடிநீா்க் கிணறுகள் தண்ணீா் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.

இது குறித்து தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

அமராவதி அணையில் இருந்து தாராபுரம் நகராட்சிக்கு நிா்வாகத்தின் நலன் கருதி குடிநீருக்காகவும், கால்நடைகளின் குடிநீா்த் தேவைக்காகவும் அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் மனிஷ், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

மேலும், தாராபுரம் பகுதியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி அடைந்த மாணவா்கள் மேல்நிலைக் கல்விக்கு சென்றுவிட்டாா்களா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.