தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பு ஒத்திகை

News image

தீயணைப்புத் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி. - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:48 am IST

திருப்பூரில் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினா் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூா் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை, விழிப்புணா்வு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மனீஷ் முன்னிலை வகித்தாா்.

இதில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, இடிபாடுகளில் சிக்கிய நபா்களை மீட்பது மற்றும் தீ விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது உள்ளிட்ட உயிா் காக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவசரக் காலங்களில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் அவசரக் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.