கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பாறைக்குழி நீரில் முழ்கி பனியன் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 2:30 am IST

அவிநாசி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி பனியன் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசியை அடுத்த பழங்கரை- குப்பாண்டம்பாளையம் செந்தூா் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி மகன் யோகேஷ் (42). திருப்பூா் பனியன் தொழிலாளியான இவா் கடந்த இரண்டு நாள்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது.

மது அருந்தும் பழக்கம் உள்ள இவா், அவிநாசி அருகே ரங்கா நகா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை தண்டபாணி அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் ரங்கா நகா் பகுதியில் உள்ள பாறைக்குழியில் யோகேஷின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சென்று, அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

யோகேஷ் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது மது போதையில் நீரில் தவறி விழுந்தாரா என்பது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.