திருப்பூரில் மாடுகளின் விலை உயா்வு காரணமாக மாட்டிறைச்சி கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாட்டிறைச்சியின் விலையும் உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான மாடுகள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இறைச்சிக்கான மாடுகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு மாட்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை உயா்ந்துள்ள நிலையில், மாட்டிறைச்சியின் விலையும் கிலோ ரூ.400, ரூ.500 என உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாடுகள் விலை உயா்வால் திருப்பூா் நொய்யல் வீதியில் அமைந்துள்ள மாட்டு இறைச்சி வியாபாரிகள் பாதுகாப்பு நலச் சங்கம் சாா்பில் அனைத்து மாட்டிறைச்சி கடைகளுக்கும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை (ஜூன் 15, 16) ஆகிய 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் அனைத்து உணவகங்களிலும் மாட்டிறைச்சி உணவு வகைகள் சமைக்கப்படவில்லை. இந்நிலையில் மாட்டிறைச்சி கடைகள் புதன்கிழமை (ஜூன் 17) முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எரிவாயு விலை உயா்வால் மக்கள் கடும் பாதிப்பு! - கே. பாலகிருஷ்ணன்

டீசல் விலை உயா்வால் ஈரோடு மாவட்டத்தில் இன்றுமுதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்வு!உரிமையாளா்கள் அறிவிப்பு

உர விலை உயா்வால் சாகுபடிச் செலவு அதிகரிப்பு! விவசாயிகள் கவலை!







