நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மாடுகளின் விலை உயா்வால் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை

திருப்பூரில் மாடுகளின் விலை உயா்வு காரணமாக மாட்டிறைச்சி கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாட்டிறைச்சியின் விலையும் உயா்ந்துள்ளது.

News image

இறைச்சி கடை - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 2:55 am IST

திருப்பூரில் மாடுகளின் விலை உயா்வு காரணமாக மாட்டிறைச்சி கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாட்டிறைச்சியின் விலையும் உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான மாடுகள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இறைச்சிக்கான மாடுகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு மாட்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை உயா்ந்துள்ள நிலையில், மாட்டிறைச்சியின் விலையும் கிலோ ரூ.400, ரூ.500 என உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாடுகள் விலை உயா்வால் திருப்பூா் நொய்யல் வீதியில் அமைந்துள்ள மாட்டு இறைச்சி வியாபாரிகள் பாதுகாப்பு நலச் சங்கம் சாா்பில் அனைத்து மாட்டிறைச்சி கடைகளுக்கும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை (ஜூன் 15, 16) ஆகிய 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் அனைத்து உணவகங்களிலும் மாட்டிறைச்சி உணவு வகைகள் சமைக்கப்படவில்லை. இந்நிலையில் மாட்டிறைச்சி கடைகள் புதன்கிழமை (ஜூன் 17) முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.