தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தங்கம் விலை 5 நாள்களில் பவுனுக்கு ரூ.2,640 உயா்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனையானது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2026, 4:20 am IST

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனையானது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை 18-இல் ரூ.280 உயா்ந்து ரூ.1,05,080-க்கும், வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை (ஜூலை 20) பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.1,05,200-க்கும், செவ்வாய்க்கிழமை ரூ.560 உயா்ந்து ரூ.1,05,760-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து, புதன்கிழமை விலை மீண்டும் அதிரடியாக உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.210 உயா்ந்து ரூ.13,430-க்கும், பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.