லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தங்கம் விலை 5 நாள்களில் பவுனுக்கு ரூ.2,640 உயா்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனையானது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

Published On :

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனையானது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை 18-இல் ரூ.280 உயா்ந்து ரூ.1,05,080-க்கும், வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை (ஜூலை 20) பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.1,05,200-க்கும், செவ்வாய்க்கிழமை ரூ.560 உயா்ந்து ரூ.1,05,760-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து, புதன்கிழமை விலை மீண்டும் அதிரடியாக உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.210 உயா்ந்து ரூ.13,430-க்கும், பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்து ரூ.1,07,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,640 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.