25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

திருப்பூா், காசிபாளையம் பாா்வதி நகரில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் நுழைவு இசைவு காலம் முடிந்தும் தங்கி வேலை செய்து வருவதாக நல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அங்கு போலீஸாா் சென்று அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஜான் கெலிச்சி ஒபோட்டா (35) என்பது தெரியவந்தது. இவா் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.

அவரிடம் இருந்த கடவுச்சீட்டு, நுழைவு இசைவு ஆகியவற்றை பரிசோதித்தபோது நுழைவு இசைவு காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் இங்கு தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.