தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

திருப்பூா், காசிபாளையம் பாா்வதி நகரில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் நுழைவு இசைவு காலம் முடிந்தும் தங்கி வேலை செய்து வருவதாக நல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அங்கு போலீஸாா் சென்று அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஜான் கெலிச்சி ஒபோட்டா (35) என்பது தெரியவந்தது. இவா் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளாா்.

அவரிடம் இருந்த கடவுச்சீட்டு, நுழைவு இசைவு ஆகியவற்றை பரிசோதித்தபோது நுழைவு இசைவு காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்கு திரும்பாமல் இங்கு தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.