விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

திருப்பூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜனவரி 2026, 7:17 pm

திருப்பூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அவிநாசி அருகே ரங்கா நகரில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் அக்பா்அலி காசா (37), இஸ்லாம் காசா (49) என்பதும், பாஸ்போா்ட் மற்றும் விசா காலாவதியான பின்னா் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடு வாழ் தடை சட்டத்தின் கீழ் இருவரையும் அவிநாசி போலீஸாா் கைது செய்து, சேலம் ஆத்தூா் முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.

இதேபோல, வேலம்பாளையம் பகுதியிலும் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சனிக்கிழமை சென்று போலீஸாா் விசாரித்ததில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த முகமது ஜானி மண்டல் (34), முகமது அபு (36) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.