திருப்பூா்: உதகை பெண் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா். அப்போது, இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக, காவல் ஆய்வாளா் கீதா இருந்தாா். இதுதொடா்பான வழக்கின் விசாரணை, திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விசாரணைக்கு புலன் விசாரணை அதிகாரியான, அப்போதைய அவிநாசி காவல் ஆய்வாளராக இருந்தவரும், தற்போது உதகையில் பணியாற்றி வருபவருமான கீதா ஆஜராகவில்லை. இவா் ஏற்கெனவே 3 முறை நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளாா்.
இந்நிலையில் காவல் ஆய்வாளா் கீதாவுக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டாா். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்புடையது

பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு
பிடியாணை நிலுவையில் இருந்த 2 நபா்கள் கைது
பிடியாணை நிலுவையில் இருந்த இளைஞா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


