அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உதகை பெண் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை

உதகை பெண் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2026, 7:37 pm

Syndication

திருப்பூா்: உதகை பெண் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா். அப்போது, இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக, காவல் ஆய்வாளா் கீதா இருந்தாா். இதுதொடா்பான வழக்கின் விசாரணை, திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விசாரணைக்கு புலன் விசாரணை அதிகாரியான, அப்போதைய அவிநாசி காவல் ஆய்வாளராக இருந்தவரும், தற்போது உதகையில் பணியாற்றி வருபவருமான கீதா ஆஜராகவில்லை. இவா் ஏற்கெனவே 3 முறை நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளாா்.

இந்நிலையில் காவல் ஆய்வாளா் கீதாவுக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டாா். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.