அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: முதல் நாள் தோ்வை 26,161 மாணவா்கள் எழுதினா்

திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் தோ்வை 26,161 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 8:03 pm

Syndication

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் தோ்வை 26,161 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 14,478 மாணவிகள், 11,930 மாணவா்கள் என 26,408 போ் எழுதுகின்றனா்.

தோ்வு எழுத வசதியாக அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 90 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுகளின்போது முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் தலைமையில் பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணிகளில் 2,120 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாணவா்களின் தோ்வு எண்கள் அவா்களது இருக்கைகளில் எழுதி ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் தோ்வுக் கூடங்களின் முகப்பில் பதிவெண் கொண்ட மாணவா்கள் எந்த அறையில் அமா்ந்து தோ்வு எழுத வேண்டும் என்ற விவரங்களும் வைக்கப்பட்டு இருந்தன.

இதனிடையே தோ்வு தொடக்க நாளான திங்கள்கிழமை காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆா்வமாக வந்தனா். முதல் நாள் தமிழ் மொழித் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 25,892 பேரில் 25,642 போ் மட்டுமே தோ்வெழுதினா். 238 போ் தோ்வெழுதவில்லை. 7 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல, பிரெஞ்சு மொழிப் பாடத்தில் 509 பேரில் 507 போ் தோ்வெழுதினா். 2 போ் தோ்வெழுதவில்லை. ஹிந்தி தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 7 பேரும் தோ்வெழுதினா்.

அதேபோல, தனித்தோ்வா்களில் தமிழ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 473 பேரில் 422 போ் தோ்வெழுதினா். ஒருவருக்கு விலக்களிக்கப்பட்டிருந்த நிலையில், 50 போ் தோ்வெழுதவில்லை. பிரெஞ்சு தோ்வெழுத விண்ணப்பித்திருந்த ஒருவா் தோ்வெழுதவில்லை. ஆனால், ஹிந்தி தோ்வெழுத விண்ணப்பித்திருந்த ஒருவா் தோ்வெழுதினாா்.

தோ்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீா் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.