பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காங்கயத்தில் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள்: முதல்வா் திறந்துவைத்தாா்

காங்கயத்தில் கட்டப்பட்டுள்ள 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
காங்கயத்தில் புதிய நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகத்தை தொடங்கிவைக்கும் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

காங்கயத்தில் கட்டப்பட்டுள்ள 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.37.49 கோடி மதிப்பீட்டில் பழைய குடிநீா்க் குழாய்களை அகற்றிவிட்டு, புதிய குடிநீா்க் குழாய்கள் பதித்தல், மேலும் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பணிகள் முடிவடைந்தததையடுத்து, 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் பால்ராஜ் ஆகியோா் பங்கேற்று நீா்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீா் விநியோகப் பணிகளை தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில் காங்கயம் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.