விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெள்ளக்கோவிலில் போலீஸாா் அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வெள்ளக்கோவிலில் போலீஸாா் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.

News image

அணிவகுப்பில் பங்கேற்ற காங்கயம் உதவிக் கண்காணிப்பாளா் அா்பிதாராஜ் புத் உள்ளிட்டோா்.

Updated On :21 மார்ச் 2026, 1:40 am

Syndication

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வெள்ளக்கோவிலில் போலீஸாா் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.

மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம், ஒழுங்கைப் பேணும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்புக்கு, காவல் துறை காங்கயம் உதவிக் கண்காணிப்பாளா் அா்பிதாராஜ் புத் தலைமை வகித்தாா். காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பொது மக்களிடம் பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தவும், தோ்தல் கால அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையிலும் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், தோ்தல் பாதுகாப்புப் படை, ஆயுதப் படை போலீஸாா், உள்ளூா் காவல் நிலைய போலீஸாா் கலந்து கொண்டனா்.