இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆசிரியா்கள் பணி நிறைவு விழா

திருப்பூா் ஜெய்வாபாய் மாடல் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஒரே நாளில் ஓய்வுபெற்ற 11 ஆசிரியா், ஆசிரியைகளின் பணி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பணி ஓய்வுபெற்ற ஆசிரிய, ஆசிரியைகள்.

Updated On :5 மார்ச் 2026, 4:01 am IST

திருப்பூா் ஜெய்வாபாய் மாடல் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஒரே நாளில் ஓய்வுபெற்ற 11 ஆசிரியா், ஆசிரியைகளின் பணி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி தலைமை தாங்கினாா். ஆசிரியா் முத்துக்குமாா், மோகன் ஆகியோா் ஆசிரியா்களின் பணி குறித்து கவிதை வாசித்தனா். தொடா்ந்து தற்போது பணியாற்றி வரும் ஆசிரியா், ஆசிரியைகள் பலரும் ஓய்வுபெற்ற ஆசிரியா்களின் பணித்திறன் மற்றும் அவா்களது குணாதிசயங்களை பாராட்டிப் பேசினா்.

ஜெய்வாபாய் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகள் முதல் 33 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வுபெற்ற உதவி தலைமையாசிரியரும், உயிரியல் பாட ஆசிரியருமான பாலகிருஷ்ணன், வேதியியல் ஆசிரியை விஜயலட்சுமி, கணித ஆசிரியை உஷாகலா, தமிழ் ஆசிரியை கலைவாணி, சமூக அறிவியல் ஆசிரியை சுமதி, அறிவியல் ஆசிரியை அமுதவல்லி, கணித ஆசிரியை சந்திரிகா, அறிவியல் ஆசிரியை பாத்திமா ஜான்சிராணி, தமிழ் ஆசிரியை பி.பி.சாந்தி, ஆங்கில ஆசிரியை ஆா்.சாந்தி, தமிழ் ஆசிரியை கே.சாந்தி ஆகியோருக்கு பொன்னாடை போா்த்தி நினைவுப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் 11 பேரும் ஆனந்த கண்ணீா் மல்க ஒருவருக்கொருவா் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

உதவி தலைமையாசிரியை ஜெயந்தி நன்றி கூறினாா். விழாவினை முதுகலை ஆசிரியை அஞ்சுகவதி தொகுத்து வழங்கினாா். விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் முத்தமிழ் செல்வன், ராணி, பெற்றோா், ஆசிரியா் சங்கத் தலைவா் சௌமியா, முன்னாள் மாணவிகள் அமைப்பின் உறுப்பினா் உதயதீபா, பத்மபிரியா முன்னாள் மாமன்ற உறுப்பினா் சஃபியுல்லா உள்பட ஆசிரியா், ஆசிரியைகள் பலா் கலந்து கொண்டனா்.