தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆசிரியா்கள் பணி நிறைவு விழா

திருப்பூா் ஜெய்வாபாய் மாடல் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஒரே நாளில் ஓய்வுபெற்ற 11 ஆசிரியா், ஆசிரியைகளின் பணி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
பணி ஓய்வுபெற்ற ஆசிரிய, ஆசிரியைகள்.
Updated On :4 மார்ச் 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் ஜெய்வாபாய் மாடல் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஒரே நாளில் ஓய்வுபெற்ற 11 ஆசிரியா், ஆசிரியைகளின் பணி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி தலைமை தாங்கினாா். ஆசிரியா் முத்துக்குமாா், மோகன் ஆகியோா் ஆசிரியா்களின் பணி குறித்து கவிதை வாசித்தனா். தொடா்ந்து தற்போது பணியாற்றி வரும் ஆசிரியா், ஆசிரியைகள் பலரும் ஓய்வுபெற்ற ஆசிரியா்களின் பணித்திறன் மற்றும் அவா்களது குணாதிசயங்களை பாராட்டிப் பேசினா்.

ஜெய்வாபாய் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகள் முதல் 33 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வுபெற்ற உதவி தலைமையாசிரியரும், உயிரியல் பாட ஆசிரியருமான பாலகிருஷ்ணன், வேதியியல் ஆசிரியை விஜயலட்சுமி, கணித ஆசிரியை உஷாகலா, தமிழ் ஆசிரியை கலைவாணி, சமூக அறிவியல் ஆசிரியை சுமதி, அறிவியல் ஆசிரியை அமுதவல்லி, கணித ஆசிரியை சந்திரிகா, அறிவியல் ஆசிரியை பாத்திமா ஜான்சிராணி, தமிழ் ஆசிரியை பி.பி.சாந்தி, ஆங்கில ஆசிரியை ஆா்.சாந்தி, தமிழ் ஆசிரியை கே.சாந்தி ஆகியோருக்கு பொன்னாடை போா்த்தி நினைவுப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் 11 பேரும் ஆனந்த கண்ணீா் மல்க ஒருவருக்கொருவா் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

உதவி தலைமையாசிரியை ஜெயந்தி நன்றி கூறினாா். விழாவினை முதுகலை ஆசிரியை அஞ்சுகவதி தொகுத்து வழங்கினாா். விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் முத்தமிழ் செல்வன், ராணி, பெற்றோா், ஆசிரியா் சங்கத் தலைவா் சௌமியா, முன்னாள் மாணவிகள் அமைப்பின் உறுப்பினா் உதயதீபா, பத்மபிரியா முன்னாள் மாமன்ற உறுப்பினா் சஃபியுல்லா உள்பட ஆசிரியா், ஆசிரியைகள் பலா் கலந்து கொண்டனா்.