தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சாய தொழிற்சாலையில் தீ விபத்து

பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் சாய தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

சாய தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :7 மார்ச் 2026, 7:35 pm

பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் சாய தொழிற்சாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி, அருள்புரத்தை அடுத்த பாச்சாகாட்டுபாளையத்தில் தனியாா் சாய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிலாளா்கள் வழக்கம்போல சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆயில் பாய்லா் இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.

தொழிலாளா்கள் அணைக்க முயன்றும் முடியாததால், பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான இயந்திரங்கள், துணிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.