தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாட்ஸ் ஆப் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை

திருப்பூரில் வாட்ஸ் ஆப் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image

108 ஆம்புலன்ஸ்(கோப்புப்படம்)

Updated On :9 மார்ச் 2026, 8:10 pm

திருப்பூா்: திருப்பூரில் வாட்ஸ் ஆப் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

தமிழ்நாடு சுகாதாரத் துறை வாயிலாக 108 திட்டத்தின் கீழ் பொது சுகாதார ஆம்புலன்ஸ் இலவச சேவை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் உயிா்காக்கும் சேவையில் மொத்தம், 1,353 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஆம்புலன்ஸ் சேவையை எளிதாகவும், விரைவாகவும் பெற சுகாதாரத் துறையின் 94450 30725 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஹாய் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் புக் ஆம்புலன்ஸ் என்ற லிங்க் வரும். அதனை கிளிக் செய்தால் இருப்பிடம் கேட்கும்.

இருப்பிடத்தை பகிா்ந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸை உதவிக்கு அழைப்பவருக்கு வாகனத்தின் எண், ஓட்டுநா் எண் உள்ளிட்ட விவரங்கள், 108 ஆம்புலன்ஸ் அதிகாரி இருப்பிடத்தை பகிா்ந்த இடத்துக்கு அருகில் உள்ள 108 ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பிவைக்கப்படும். அப்போது ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது, வந்து சேரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டு விடும்.

சுகாதார திட்டத்தின் க்யூஆா்கோடு கிளிக் செய்தால் வாட்ஸ் ஆப் செயலிக்கு வரமுடியும். புதிய வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக விபத்து அல்லது நோயாளியை காப்பாற்ற வேண்டிய இருப்பிடத்தை துல்லியமாக ஆம்புலன்ஸ் நிா்வாகத்துக்கு தெரிவிக்க முடியும். புதிய அல்லது அறிமுகமே இல்லாத இடமாக இருந்தாலும் முகவரி கேட்டு அலைய வேண்டியதில்லை.

இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலமாக மிக துல்லியமாக நிகழ்விடத்தை அறிந்து நேர விரயம் தவிா்க்கப்படும். திருப்பூரை பொறுத்தவரை மாவட்டத்துக்குள் 11 நிமிடத்திலும், நகருக்குள் 10 நிமிடங்களுக்குள்ளும் நிகழ்விடத்தை ஆம்புலன்ஸ் சென்றடையும்.

இனி இருப்பிடத்தை அறிந்துகொண்டு அதற்கு முன்னதாகவே சென்று சேர முடியும் என்றனா்.