எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பட்டா நிலத்தை அளவீடு செய்துதர வலியுறுத்தல்

ஈட்டிவீரம்பாளையத்தில் பட்டா நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன்.
Updated On :9 மார்ச் 2026, 9:15 pm

Syndication

திருப்பூா்: ஈட்டிவீரம்பாளையத்தில் பட்டா நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம், வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை,புதிய குடும்ப அட்டை, சாலை, குடிநீா் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 690 மனுக்கள் பெறப்பட்டன. மனுதாரா்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அளித்த மனுவில், ‘திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்குள்பட்ட பகுதியில், அந்த பகுதியைச் சோ்ந்த ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு கடந்த 1944ஆம் ஆண்டில் 122 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தை அளந்துகொடுக்கவில்லை. எனவே நிலத்தை உடனடியாக அளவீடு செய்து தர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

தென்னம்பாளையம் பட்டுக்கோட்டையாா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். குடியிருக்கும் வீட்டுக்கு தற்போது வரை பட்டா இல்லாமல் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க கேட்டு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விரைவாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும்.

காங்கயம் செல்லப்பம்பாளையம் ரெட்டிவலசு பொதுமக்கள் அளித்த மனுவில், ‘காங்கயம் சிவன்மலை பகுதியில் உள்ள தனியாா் கல் குவாரி மற்றும் எம்.சாண்ட் ஆலைகளின் டிப்பா் லாரிகளின் அதிக எடையால் அரசின் கான்கிரீட் பாலம் உடைந்துள்ளது. மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திப்பதுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகிறாா்கள். இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடத்த உள்ளோம்.

காங்கயம் பச்சாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: பச்சாபாளையம் பகுதியில் புதிதாக கல் குவாரி அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். வேலூா் செட்டிபாளையம் குக்கிராமம் பகுதியில் உள்ள பூமியில் கல்குவாரி, கல் கிரஷ்ஷிங் யூனிட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கல்குவாரி அமையவிருக்கும் இடத்தில் இருந்து 500 மீட்டா் சுற்றறளவுக்குகுடியிருப்புகள் உள்ளதோடு, பள்ளி, கோயில்களும் உள்ளது. எனவே கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்றனா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சாா்பில் இயற்கை மரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 22 பேருக்கு ரூ.3.74, லட்சம் மதிப்பிலான காசோலைகளை மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் துரை முருகன், ஷீலா பூசலெட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பத்மபிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.