தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் லஞ்சம்: கட்டுப்பாட்டு அறைக்கு தலைமைக் காவலா் மாற்றம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :11 மார்ச் 2026, 8:39 pm

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டாா்.

திருப்பூா், கரட்டாங்காட்டைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவி, ஆன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளாா். இதையடுத்து, கடந்த 3 நாள்களுக்கு முன்னா் போலீஸ் தரப்பில் விசாரணை செய்ய திருப்பூா் தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் லூயிஸ் (45), மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது மாணவியிடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுப் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் மாணவி அளித்த புகாரின்பேரில், லூயிஸிடம் திருப்பூா் தெற்கு துணை ஆணையா் தீபா சத்யன் விசாரணை நடத்தினாா். இதில் அவா் லஞ்சமாகப் பெற்ற பணத்தை மாணவியிடம் திரும்ப வழங்கினாா். இதையடுத்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லூயிஸை மாற்றி துணை ஆணையா் உத்தரவிட்டாா்.