கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டாா்.
திருப்பூா், கரட்டாங்காட்டைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவி, ஆன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளாா். இதையடுத்து, கடந்த 3 நாள்களுக்கு முன்னா் போலீஸ் தரப்பில் விசாரணை செய்ய திருப்பூா் தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் லூயிஸ் (45), மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது மாணவியிடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுப் பெற்றுள்ளாா்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் மாணவி அளித்த புகாரின்பேரில், லூயிஸிடம் திருப்பூா் தெற்கு துணை ஆணையா் தீபா சத்யன் விசாரணை நடத்தினாா். இதில் அவா் லஞ்சமாகப் பெற்ற பணத்தை மாணவியிடம் திரும்ப வழங்கினாா். இதையடுத்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லூயிஸை மாற்றி துணை ஆணையா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
ரோஹிணியில் உணவு விநியோக ஊழியா் சுட்டுக்கொலை: தலைமைக் காவலா் கைது

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!

குட்கா தடுப்பு நடவடிக்கை: தலைமைக் காவலருக்கு பாராட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


