ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சேவூா் அருகே நடந்து சென்ற சத்துணவு ஊழியரிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :11 மார்ச் 2026, 8:33 pm

சேவூா் அருகே நடந்து சென்ற சத்துணவு ஊழியரிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த காசிபாளையம் கூடக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் மனைவி ரோஸி (59) . இவா், சேவூா் அருகே ஆலத்தூா் நல்லகாளிபாளையம் அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு புதன்கிழமை நடந்து சென்றுள்ளாா்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், ரோஸியை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து ரோஸி அளித்த புகாரின்பேரில் சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.