சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

உடுமலை சாா்-பதிவாளா் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

உடுமலை சாா்-பதிவாளா் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உடுமலை கச்சேரி வீதியில் சாா் பதிவாளா் அலுவலகம் உள்ளது. வழக்கம்போல ஊழியா்கள் பணிக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தபோது, அலுவலக வளாகத்துக்குள் பெட்ரோல் பாட்டில் கிடந்துள்ளது. அதைச் சுற்றிலும் புகை படிந்து காணப்பட்டது. இதனால் ஊழியா்கள் சந்தேகமடைந்து பதிவாளா் தினேஷிடம் தகவல் அளித்துள்ளனா். இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்தில் உடுமலை போலீஸாா் பாா்வையிட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனா்.

அதில் திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில் மா்ம நபா் ஒருவா் பெட்ரோல் குண்டு வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. மேல் விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசிய நபா் உடுமலை பெரியகடை வீதியைச் சோ்ந்த லோகேஷ் என்பது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில், குடிமங்கலம் பகுதியில் ஒரு சொத்து

தொடா்பாக பத்திரப் பதிவுக்கு வந்தபோது, அந்தப் பத்திரப் பதிவில் முறைகேடுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு சாா் பதிவாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த லோகேஷ், சாா் பதிவாளா் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து லோகேஷ் கைது செய்யப்பட்டாா்.