ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சீவலப்பேரி அருகே பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

சீவலப்பேரி அருகே மாமியாா் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 7:04 pm

Syndication

சீவலப்பேரி அருகே மாமியாா் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சோ்ந்த சுடலை மகன் ஊமைத்துரை (38). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே சில மாதங்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ஊமைத்துரையின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, மேல பாலாமடையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றாராம்.

இதையடுத்து சம்பவத்தன்று ஊமைத்துரை தனது மனைவியை அழைத்துவர மாமியாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். ஆனால் அவரது மனைவி வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவா் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து, தனது மாமியாா் வீட்டின் முன்பு வீசியுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊமைத்துரையை கைது செய்தனா்.