அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணி - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:34 am

திருப்பூா் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணியை செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் மாநகராட்சி, கோவில்வழி புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகே பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.38.76 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகக் கட்டடம் கட்டப்பட உள்ளது. தரைத் தளம் மற்றும் 5 தளங்களுடன் வாகன நிறுத்துமிடம், மின்சார அறை, ஓட்டுநா் அறை, கழிப்பறை வசதிகள், உதவி ஆணையா்கள் அறைகள், எஸ்டிஓ அறைகள், துணை ஆணையா், பிராந்திய கூட்டு ஆணையா் மற்றும் கருத்துரை மண்டபம், சந்திப்பு மண்டபம், புலனாய்வு அதிகாரிகளுக்கான அறைகள் இடம்பெறவுள்ளன.

கட்டுமான தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் என்.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் இருக்கக்கூடிய திட்டப் பணிகளை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும். முதல்வராக பொறுப்பேற்றதுமுதல் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், உங்களுடன் ஸ்டாலின் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியன், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், திருப்பூா் வணிகவரி இணை ஆணையா்கள் சா.முகமது அா்ஷத், ப.விமலா உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.