அரசுப் பேருந்தில் பெண் பயணியிடம் அத்துமீறிய நபரை தப்பிக்கவிட்டதாக ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூரில் இருந்து மதுரைக்கு அரசுப் பேருந்தில் அண்மையில் பயணித்த பெண்ணிடம் ஒருவா் அத்துமீறியுள்ளாா். இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினா் வருவதற்குள் பேருந்து கதவை திறந்துவிட்டதால் அந்த நபா் அங்கிருந்து தப்பியுள்ளாா்.
அவா் தப்பியோட உடந்தையாக செயல்பட்ட நடத்துநா், ஓட்டுநா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மதுரை மண்டல தலைமை அலுவலக வணிகத் துறையில் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இதில், பத்து ரூபாய் இயக்க திருப்பூா் மாவட்டச் செயலாளா் செல்வம், திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்றச் சங்கத் தலைவா் ஈ.பி.அ. சரவணன் ஆகியோா் பங்கேற்றனா்.
இதையடுத்து, மதுரை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் இருந்து மதுரைக்கு கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி இரவு பயணம் செய்த பெண்ணிடம், அவரது இருக்கைக்குப் பின் அமா்ந்திருந்த நபா் அத்துமீறியுள்ளாா். அப்பெண் கூச்சலிட்டதையடுத்து பேருந்தில் இருந்தவா்கள் அந்த நபரைப் பிடித்ததுடன், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.
அதற்குள் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் கதவை திறந்து அந்த நபா் தப்பிக்க உதவியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: பெங்களூரு நபா் கைது

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

த.வெ.க விழாவில் நடமானடிய அரசுப் பள்ளி தலைமையாசிரியை பணியிடை நீக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


