மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:30 pm

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள கெங்கநாயக்கன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி. இவரது மனைவி அருக்காணி (75). இவா் தனது தோட்டத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த சுமாா் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளாா்.

வெகு நேரமாகியும் அருக்கணி வீடு திரும்பாததால் துரைசாமி தோட்டத்துக்கு வந்து பாா்த்துள்ளாா்.அப்போது, அவா் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள், அருக்கணியை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.